உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க பதவி இராஜினாமா?

யர் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

இது குறித்து அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹசீமுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் க்ஷனிகா ஹிரிபுரேகமவை இராஜினாமா செய்யுமாறு சில தரப்பினர் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர். 

இதன் காரணமாக ரஜீவ விஜேசிங்க அதிருப்தியடைந்திருந்ததாக கூறப்படுகிறது. 

எது எவ்வாறு இருப்பினும் இது பற்றி அறிந்து கொள்ள ரஜீவ விஜேசிங்கவை நாம் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.

இதேவேளை அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -