நிந்தவூரில் சாரதி அனுமதிப் பத்திரம் பெருவதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

சுலைமான் றாபி-
நிந்தவூர் நெனசல அறிவகம், சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பொலிசாருடன் இணைந்து நடாத்திய வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான ஆலோசனையும், முறையான பயிற்சியுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் நிகழ்வும் இன்று (14) நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யன்க் அமைப்பின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நெனசல அறிவகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.புஹாது, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் சாஜன் எம்.ரி.எம். நஜீம், போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.அப்துல் றசூல், சாரதிப் பயிற்சி போதனாசிரியர் யு.எம்.உவைஸ் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் பெற ஆவலுடையோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பொலிசாரினால் விளக்கவுரைகளும், முறையான பயிற்சியுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -