நஜ்முல் ஹுசைன்
நஜ்முல் ஹுசைன்-
தெமட்டகொட B/31 ஞானவிமல வீதி, தொடர்மாடியில் இயங்கிவரும் 'அல் மதரஸத்துன் நூர்'மத்ரசாவின் 3வது வருட பரிசளிப்பு விழா அண்மையில் தெமட்டகொட, கெட்டவலமுல்ல மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மத்ரசாவின் அதிபரான மௌலவியா பாத்திமா நுஸ்ரா ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் பெண்கள் கிளைத் தலைவியான திருமதி இப்தி, மேல் மாகாண சபை உறுப்பினரான முஜிபுர் ரஹ்மானின் செயலாளர் எம்.சீ. முஹம்மத் அலி, இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பாத்திமா லூலூ ஜிப்ரி, நவாஸியா பாருக், மற்றும் தேசமான்ய ஷலீனா மாஹிர்,உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தேசமான்ய ஷலீனா மாஹி;ர் மாணவன் ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும் மத்ரஸா மாணவர்களையும் படங்களில் காணலாம்
.jpg)
.jpg)