வாழைச்சேனை காகித ஆலையில் 200கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிலிளக்கும் அவல நிலை!

குகதர்ஷன்-

வாழைச்சேனை காகித ஆலையின் மின்சாரம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 நூறுக்கும் மேற்பட்ட காகித ஆலை ஊழியர்கள் தொழில் வாய்ப்பிழக்கின்ற அவல நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

2015.02.09ஆம் திகதியன்று மட்டக்களப்பு தலைமை மின்சார சபை கிளை உத்தியோகஸ்த்தர்களால் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபைக்கு 33 கோடி ரூபாய் மின்சார கட்டணம் கடந்த பல வருடங்களாக செலுத்த தவறியதினால் இவ்நடிவடிக்கை ஆலை முகாமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் காகித ஆலை ஊழியர் சங்க உறுப்பினர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளன.

ஆலையின் இயந்திரமும் முற்றாக இயங்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. இவ் நிலமை தொடர்ந்து நீடிக்கப்படுமானால் பல இலட்சம் ரூபாய் நஸ்டம் ஏற்பட்டு ஆலை மூடப்படக் கூடிய நிலைமை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

மின்சார துன்டிப்பு காரணமாக ஆலை ஊழியர்களின் மின்சாரம் சார்ந்த நடவடிக்கைகள் குடி நீர் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆலையில் இருந்தே பாசிக்குடா சுற்றுலா விடுதிகளுக்கு குடி நீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா விடுதிகளிலும் நீர் இன்மையில் பல அசௌகரியங்களை உல்லாச பயணிகள் எதிர் கொன்டுள்ளனர்.

அத்துடன் ஆலைக்கு இதன் மூலம் கிடைத்த வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலை விடுதிகளில் தங்கியிருக்கும் பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ் நிலமை காரணமாக 14.02.2015, 15.02.2015 ஆம் ஆகிய திகதிகளில் அத்தியாவசிய ஊழியர்களை தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆலை முகாமையினால் அறிவித்தல் வழங்கப்பட்டுளளது.

இதேவேளை காகித ஆலையின் நிறைவேற்று பொதுமுகாமையாளர் எம்.முபாரக் கருத்து தெரிவிக்கையில்! கடந்த அரசாங்கத்தின் கீழ் ஆலைக்கு பொறுப்பாக விருந்த முகாமையாளர் மின் கட்டணம் உள்ளிட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் செலுத்தவில்லை என அவர் கூறினார்.

மேலும் அந்த முகாமையாளருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலையின் தற்போதைய நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்று பொது நல உத்தியோகத்தர் தெரிவித்தார்.

மின்சார சபைக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுக்கு ஊடாக திரைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் திரைசேரியினால் நிதி ஒதுக்கப்பட்டவுடன் அடுத்த வாரமளவில் ஆலை மீள ஆரம்பிக்கப்படுமெனவும் ஆலையின் நிறைவேற்று பொது நல உத்தியோகத்தர் எம்.முபாரக் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -