எம்.ஜே.எம். முஜாஹித்-
அரசியல் அதிகாரம் என்பது இறைவன் நாடியோருக்கே வழங்குவான். எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் இன, மத பேதமின்றி மூவின மக்களுக்கும் பாரிம் பணியாற்றிவருகின்றோம் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இறக்காம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாங்காமம் ஒராபி பாஸா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம், பேன் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் லாஹிர் தலைமையில் நடைபெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தரம் 05ம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இறக்காம கோட்ட கல்வி அதிகாரி யு.எம். மஹ்முத்லெப்பை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.