அரசியல் அதிகாரம் கிடைத்த நேரம் இன, மத பேதமின்றி பணியாற்றினோம்-உதுமாலெப்பை

எம்.ஜே.எம். முஜாஹித்-

ரசியல் அதிகாரம் என்பது இறைவன் நாடியோருக்கே வழங்குவான். எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் இன, மத பேதமின்றி மூவின மக்களுக்கும் பாரிம் பணியாற்றிவருகின்றோம் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இறக்காம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாங்காமம் ஒராபி பாஸா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம், பேன் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் லாஹிர் தலைமையில் நடைபெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தரம் 05ம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இறக்காம கோட்ட கல்வி அதிகாரி யு.எம். மஹ்முத்லெப்பை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -