ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ள அந்த கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொண்டு வர வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளனர்.
அவரை தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவதன் மூலம் கட்சியை வெற்றி பாதையில் இட்டுச் செல்ல முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த ஐக்கிய தேசியக் கட்சி உதவியதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசங்கவின் அரசியல் எதிர்காலம் குறித்து அக்கறை காட்டி வருகிறார்.
இது சுதந்திரக் கட்சியின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் கூடிய 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கூறிய விடயங்கள் சம்பந்தமான விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.