ஏ.எல்.றமீஸ்-
புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக அட்டளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான துறை சார்ந்த அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில்(25) உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.அஸீஸ், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாள்கள் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.