பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு அருகில் தேர்தல் பிர­சா­ரத்­துக்குத் தடை!

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை நடை­பெ­ற­வுள்ள பரீட்சை நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட மாட்­டா­தென பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோன் தெரி­வித்­துள்ளார்.

பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு அண்­மித்த பகு­தி­களில் துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கித்­த­லுக்கோ கூட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் ஊர்­வ­லங்­களை நடத்­து­வ­தற்கோ ஒலி­பெ­ருக்­கிகள் மூலம் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வ­தற்கோ இட­ம­ளிக்­கப்­பட மாட்­டா­தெ­னவும் அவ்­வாறு மேற்­கொள்­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், எதிர்­வரும் 9 ஆம் திகதி கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர மாண­வர்­க­ளுக்­கான பரீட்­சைகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. இந்தப் பரீட்­சை­க­ளுக்­காக நாட­ளா­விய ரீதியில் 4,279 பரீட்சை நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பரீட்சை நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த பரீட்சை நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் மேற்­கூ­றிய எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அனுமதி வழங்கக் கூடாதென சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :