வெள்ளத்தில் மூழ்கியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் காரியாலயம்











சப்னி அஹமட்-

டந்த 10 மணி நேரம் அட்டாளைச்சேனையில் இடைவிடாது பெய்த மழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பொதுச்சந்தை, வங்கிகள், பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச்செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூரின் காரியாலயம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அதுபோன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இன்று வெள்ளத்தில் மூழ்கியிருந்த போதிலும் சகல உத்தியோகத்தர்களும் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.

சில வீடுகளில் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் வெளியேறி குடும்பங்களின் வீடுகளில் வசித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய அசாதாரண நிலமைகளை நேரில் சென்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.அதிசயராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.நஸீர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :