வீதியில் இறங்கிப் போராடுவோம் - வசீம் தாஜூடீன் குடும்பத்தினர் எச்சரிக்கை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் குடும்பத்தினர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டாலோ அல்லது கிடப்பில் போடப்பட்டாலோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தமக்கு நம்பிக்கையிருப்பதாக தாஜூடீன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், ஏனைய விசாரணைகளைப் போன்றே இந்த விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம்எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு விசாரணைகள் முடக்கப்படுமோ என்ற அச்சம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடீன் கொலை குறித்த வழக்கில் நீதி கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -