காத்தான்குடியில் - 25 மாதர் சங்கத்திலுள்ள 1300 மாதர்சங்க உறுப்பினர்களுக்கு அறிவுட்டல் நிகழ்வு. படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் மாதர் அமைப்புகள் ஊடாக மாதர்களின் வாழ்வாதாரத்தை உயத்துவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விஷேட திட்டங்களை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ் விஷேட திட்டம் இம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ் விஷேட திட்டத்தின் கீழ் சுயதொழில் துறை மற்றும் தொழில் துறைகளில் ஊக்குவிக்க விஷேட பயிற்சிகள் ,வாழ்வாதார உதவிகள்,அறிவூட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் இலகு கடன் வசதிகள் என்பவற்றை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் ,மண்முனைப் பற்று ஆரையம்பதி ,காத்தான்குடி ஆகிய பிரதேச யெசலாளர் பிரிவிலுள்ள 25 மாதர் சங்;கத்திலுள்ள 1300 மாதர்சங்க உறுப்பினர்களுக்கு விஷேட அறிவுட்டல் நிகழ்வொன்று 20-12-2014 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் விஷேட அறிவூட்டல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்,அப்துல் மஜீத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்குகான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,அல்ஹாஜ் எம் .பஷிர்,கட்சி முக்கியஸ்தர்கள்,பெரும் திரளான மாதர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -