வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட RDS கட்டடம் திறப்பு




த.நவோஜ்-

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்திசங்க கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை இடம் பெற்றது.

புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் கே.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கௌரவ அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.வினுராஜ்,புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.முரசொலிமாறன், கிராம உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சாந்தி குமாரவேல், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஆர்.ரவீந்திரன், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சுரேஸ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :