அம்பாரை மாவட்ட அரசியல் வாதிகள் அனைவரும் அரசுடன் இருந்தும் பலன் இல்லை- முஜிபுர்ரஹ்மான்

ம்­பாறை மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பி­னர்கள் அனைவரும் ஆளும்­த­ரப்பில் இருக்­கின்­றனர். ஆனால் அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிங்களுக்கு மக்­க­ளுக்கு காணி தொடர்பில் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றிற்கு தீர்­வை­பெற்­று­கொ­டுக்க அவர்­களால் முடி­யா­துள்­ள­தாக மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹமான் தெரி­வித்தார்.

அரசில் இணைந்­து­கொள்­வ­தன் ­மூலம் மக்­க­ளுக்கு பெரும் சேவை­யாற்ற முடியும் என கூறிக்­கொள்ளும் அர­சியல் தலை­மை­களால் எத­னையும் சாதிக்கா முடி­யா­துள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

அண்­மையில் கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜ­யமொன்றினை மேற்­கொண்ட ஐக்­கிய தேசிய கட்­சியின் குழு­வி­டம் அம்­பாறை மாவட்ட மக்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுகள் தெடர்­பிலும் அதற்­காண நட­வ­டிக்­கைகள் தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லுமே அவர் மேற்­காண்­ட­வாறு தெரி­வித்­த­துள்ளார்.

அம்­பாறை மாவட்­டத்­தி­லேயே அதி­க­மான முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அங்கு பெரு­ம­ள­வி­லான மக்கள் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் மக்கள் எம்­மிடம் முறை­யிட்­டுள்­ளனர்.

குறிப்­பாக அம்­மா­வட்டம் முழு­வ­து­மாக மக்­க­ளுக்கு காணி தொடர்­பி­லான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. கொழும்பு நகரில் அபி­வி­ருத்­தியை காரணம் காட்டி மக்­களின் காணிகள் சூறை­யா­டப்­ப­டு­வ­துபோல் அம்­பா­றையில் தொல்­பொருள் ஆய்­வுகள் மற்றும் அரச காணிகள், சட்­ட­வி­ரோத குடி­யேற்றம் என குறிப்­பிட்டு மக்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. அங்­குள்ள அர­சியல் தலை­மைகள் அத்­த­னை­பேரும் அர­சுடன் இருந்த போதிலும் இதற்கு தீர்வை பெற முடி­ய­வில்லை.

அக்­க­றைப்­பற்றில் வட்­ட­மடு பகு­தி­யில்­லுள்ள மக்­களின் 500 ஏக்கர் வரை­யி­லான மேய்ச்சல் நிலம் அப­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத­னி­டையே பொத்­துவில் நகரில் முஸ்­லிம்கள் வாழும் பகு­தியில் பகு­தியில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­மையால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கின்­றனர்.அத்­தோடு பொத்­துவில் கரங்­கோ­வா­வட்­டையில் மக்­களின் காணியில் யானை தொல்லை இருப்­ப­தாக காரணம் காட்டி அங்கு காணி அப­க­ரிப்பு இடம்­பெ­ரு­கின்­றது. அஷ்ரப் நகரில் முஸ்­லிம்­களின் காணி இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே சம்­மாந்­துறை கரங்­கோ­வா­வட்டை பகு­தி­யிலும் மக்­களின் காணியில் யானை தெல்­லையை காரணம் காட்டி ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஒலுவில் துறை­முக அபி­வி­ருத்­திக்­காக மக்­க­ளி­ட­மி­ருந்து சுவீ­க­ரிக்­கப்­பட்ட கணி­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கும்­போது சிலர் ஆவணங்கள் இன்­மையால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு மனி­த­நேய அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­ப­டா­துள்­ளது. அத்­தோடு சவூதி அர­சாங்­கத்­தினால் கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்ட சுனா­மி­வீட்­டுத்­திட்­டமும் இன்­று­வ­ரைக்கும் மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றது. இவ்­வாறு மக்களின் காணி மற்றும் இருப்பிடம் தெடர்பிலான பிரச்சனை நீண்டுகொண்டே செல்கின்றன. இதற்கு அங்குள்ள அரசியல்

வாதிகளால் தீர்வைபெற்றுக்கொடுக்க முடியாமையினால் மக்கள் எம்மிடம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் நாம் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம் என்றார்.

ஊடகப்பிரிவு,
மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :