அட்டாளைச்சேனையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல் வழங்குதல் நிகழ்வு







சலீம் றமீஸ்,பைஷல் இஸ்மாயில்-

2014 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுபெரும்போகத்திற்காக இலவசமாக விதை நெல் விநியோகம் செய்தலுக்கான விண்ணப்பப் படிவம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு கமநலசேவைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

கமநல சேவைக் குழுவின் தலைவர் எஸ்.எல்.அபுதாலிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்குமாகாண சபை  வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும்அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் கலந்து கொண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கான பெரும்போக இலவசமாக விதை நெல் பெரும் விண்ணப்பப் படிவங்களை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை கமநல பிரதேசத்துக்கட்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுதங்களுக்கான இலவசமாக விதை நெல் விநியோக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :