சந்திரிகா இயக்கும் நாடகத்தின் கதாநாயகன் மாத்திரமே மைத்திரி!

ர்­வ­தே­சத்தின் தயா­ரிப்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் திரைக்­க­தையில், சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க இயக்கும் மெகா தொடரே இந்த நாடகம். இந்த நாட­கத்தின் கதா­நா­யகன் மாத்­தி­ரமே மைத்­தி­ரி­பால. ஆனால் நாட­கத்தின் அடுத்த பகுதி என்­ன­வென்­ப­தையே அவர் அறி­யா­துள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.

நேற்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்றசெய்­தி­யாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக குமா­ர­துங்க சுனாமி காலத்தில் புலி­க­ளுடன் சுனாமி நிவா­ரண சபையை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முரண்­பட்டுக் கொண்டே அந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய ஜாதிக ஹெல உறு­ம­ய­வினர் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ருடன் எவ்­வாறு இணையப் போகி­றார்கள்.

சர்­வ­தே­சத்தின் சூழ்ச்­சி­யி­லேயே இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அண்­மையில் மலே­சி­யாவில் நடை­பெற்ற புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் மாநாடு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அனந்தி சசி­தரன் மற்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் போன்றோர் கலந்து கொண்­டனர். அவ்­வா­றா­ன­வர்­களின் கோரிக்­கை­களும் இந்த எதி­ர­ணியில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. எனவே, இது­வொரு பயங்­க­ர­மான செயற்­பா­டாகும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­பா­க­ர­னுடன் ஒப்­பந்தம் செய்­த­போது ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­காமல் அமை­தி­யா­கவே இருந்தார். அந்த அமை­தியின் அர்த்தம் என்ன? அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக் ஷ போன்ற ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருந்தார் நிச்­ச­ய­மாக அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருப்பார். ஆனால், சந்­தி­ரிகா அதனை அப்­போது செய்­ய­வில்லை. அவ்­வா­றான ஒரு குழு­வி­ன­ரு­ட­னேயே மைத்­தி­ரி­பால சிறி­சேன இணைந்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பாது­காத்­த­வர்­க­ளுக்கா, பாது­காத்துக் கொண்­டி­ருக்­கி­ற­வர்­க­ளுக்கா வாக்­க­ளிக்க வேண்டும். என்­ப­தையும், மாறாக கட்­சியை சீர­ழிக்­கின்­ற­வர்­க­ளுக்கா வாக்­க­ளிக்க வேண்டும் என்­பது தொடர்பில் மக்கள் முடி­வெ­டுக்க வேண்டும்.

நாட்டின் அர­சியல், பொரு­ளா­தார, ஜன­நா­யகம் மற்றும் சமா­தா­னத்­தையும் நிலை­பெறச் செய்து நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­பவர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே. ஆனால், கடந்த காலங்­களில் புலி­களை பாது­காக்க முனைந்­த­வர்­களே எதி­ரணி மற்றும் பொது­வேட்­பா­ளரின் பின்­ன­ணியில் இருக்­கின்­றார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சர் டளஸ் அழ­கப்­பெ­ருமாள்

சர்­வ­தே­சத்தின் இந்த சூழ்ச்சி பற்­றிய ஆழ அக­லங்­களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சர்­வ­தேசம் தனது கைப்­பொம்­மை­யாக சிலரை வைத்­துக்­கொண்டு தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயல்­கின்­றது. மிகவும் பயங்­க­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான விட­ய­மாகும்.

அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா

எம்­மீது நம்­பிக்கை வைத்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக என்னை நிய­மித்­த­மைக்கு கட்­சிக்கு எனது நன்­றி­கைளைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். அத்­தோடு இந்த பதவி எனக்கு கிடைத்த ஒரு பாக்­கி­ய­மாக கரு­து­கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தவ­றான முடி­வை­யிட்டு நான் கவ­லை­ய­டை­கின்றேன். அதே­வேளை, அவர்­க­ளுக்கு இந்த கட்­சியின் பெயரைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கோ சீர­ழிப்­ப­தற்கோ எவ்­வித உரி­மையும் கிடை­யாது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் கட்­சியை வெற்­றிப்­பா­தையில் இட்டுச் சென்றார். ஒன்­பது மாகா­ணங்­களில் எட்டு மாகா­ணங்­களை எம்மால் வெற்றி கொள்ள முடிந்­தது. உள்­ளூ­ராட்சி சபை­களில் 90 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான அதி­கா­ரங்­களை கைப்­பற்ற முடிந்­தது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக பயங்­க­ர­வாத யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வர முடிந்­தது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவி­னு­டைய காலத்­தி­லேயே கட்சி அதி­க­மான வளர்ச்­சியைக் கண்­டது. ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் கால­கட்­டத்தில் பயங்­க­ர­வா­தமே பல­ம­டைந்­தி­ருந்­தது. ஆனால், அத­னையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே முடிவுக்குக் கொண்டுவந்தார்.

நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொருளாளர் டளஸ் அழகப்பெரும, மற்றும் உபதலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த மற்றும் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான பௌஸி, ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :