ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவில் எதுவித மாற்றமுமில்லை. இருந்தும் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இடதுசாரி கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சம சமாஜக் கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியன அரசயலில் இடம்பெற்றுள்ள அதிரடி மாற்றங்களின் பின்னரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கின்றன.
லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதானகவிடம் இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதில் எதுவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment