அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றாகிய அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவைகள் தொடர்பாக பிரதேச மக்களை விளிப்பூட்டும் செயலமர்வானது அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எம்.எம்.சியாம்சீர் அவர்களின் தலைமையில் 2014.11.14ம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று காதிரிய்யா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக, அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின உத்தியோகத்தர் எ.எ.சகீல், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.முஹம்மது அமீன், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பஹ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், வளவாளர்கள் அனர்த்தம் மற்றும் அதற்கான அரசின் நடவடிக்கைகள்;, செயற்றிட்டங்கள், டெங்கு நோயின் உருவாக்கமும் பரம்பலும் அதன் தீவிரத்தன்மையும் கட்டுப்பாடும், அனர்த்த நிலைமைகளும் உளவளத்துணையின் முக்கியத்துவமும் பயன்பாடும் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதில், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment