சாய்ந்தமருது பிரதேசத்தில் விபத்து இளைஞன் படுகாயம்!

 சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இன்று காலை 11 மணியளிவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.சபையின் பேருந்து பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள மஞ்சள் கடவையில் பிரவேசித்த நபருக்காக திடீர் பிரேக் போட்டதும் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த காரைதீவு இளைஞன் பஸ்ஸூடன் மோதுண்டார்.

விபத்தில் படுகாயமுற்ற இளைஞன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :