28 தேர்தல்களில் வெற்றியடைந்த தற்போதைய அரசாங்கம், 29 முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பாரிய வெற்றிபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது தமக்கு அதீத நம்பிக்கை உள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை நேசிக்கும் மக்கள் உள்ளவரை, தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை இடைநிறுத்த ஒருபோதும் முடியாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொதுமக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருப்பதனால், அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் வெற்றிபெறும் என இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

0 comments :
Post a Comment