மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு

த.நவோஜ்-


ட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இடம்பெற்றது.
தற்போது ஐயப்ப பக்த அடியார்கள் அனுஸ்டிக்கும் ஐயப்ப விரதம் நாடு பூராகவும் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

விரத பூசைகள் யாவும் சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ.எஸ்.உதயகுமார் குருக்கள் ஆகியோரால் இடம்பெற்றது. இங்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய பூசை பின்னர் அபிஷேகப் பூசை மற்றும் மாலை அணிவிக்கும் பூசையும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரால் விரத முறை பற்றி நற்சிந்தனை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இம்மாதம் 17ம் திகதி தொடக்கம் தை மாதம் 15ம் திகதி வரை தினமும் மாலை 6 மணிக்கு கூட்டு வழிபாடு மற்றும் பூசைகள் என்பன இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :