தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு





எம்.வை.அமீர்-

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு இன்று (2014-11-12 )தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த 3 வது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயில் கலந்து கொண்டார். இதேவேளை விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வின் விசேட பேச்சாளராக பேராசிரியர் வீராஞ்ச கருணாரத்தின கலந்து விசேட சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வின் ஏற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஹனீஸின் வழிநடத்தலின் கீழ் இடம்பெறும் இந்நிகழ்வில் 30க்கு மேற்பட்ட ஆராச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டு விவாதிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :