ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

னாதிபதித் தேர்தலில் முன்னெடுக்கவுள்ள நிலைப்பாடுகள் குறித்து ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியது முதல் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்ற அறிவித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பு ஹெல உறுமயவின் யோசனைகளை ஏற்று செயற்படத் தயார் எனின், தாம் அவ்வமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேபோன்று, இன்னும் பல கட்சிகளுடனும் ஹெல உறுமய தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, தாம் பல அமைப்புக்களுடன் இதுவரையில் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :