காத்தான்குடி -றிதா சர்வதேச பாடசாலையின் 3வது பட்டமளிப்பு விழா-படங்கள்.







பழுலுல்லாஹ் பர்ஹான்-

றிதா சர்வதேச பாடசாலையின் 3வது பட்டமளிப்பு விழா 07-11-2014 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

றிதா சர்வதேச பாடசாலையின் செயலாளர் எம்.ஏ.எம்.சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு றிதா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளரும்,காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.சியாட்டுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலையின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது றிதா சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய பாலர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் பொன் செல்வநாயகம்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.பதுர்;தீன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், றிதா சர்வதேச பாடசாலையின் அதிபர் ஜனாபா.மஸாக்கீன் றியாஸ் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விழாவில் றிதா சர்வதேச பாடசாலை பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :