விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை வடக்கு காணி விவகாரத்தில் அரசாங்கம் திட்டவட்டம்

வேண்டும் என்று கால நிர்­ணயம் விதித்து வட மாகாண சபையில் பிரே­ரணை நிறை­வேற்­ற­ப்­பட்­டுள்­ளது. ஆனால், தனியார் காணி­களோ அரச காணி­களோ தேசிய பாது­காப்பு மற்றும் தேசிய அக்­கறை என்று வரும்­போது அங்கு விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

மேலும் வட மாகாண சபை­யா­னது இதற்கு முன்னர் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. அந்­த­வ­கையில் இம்­முறை நிறை­வேற்­றி­யுள்ள பிரே­ர­ணை­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கும் முர­ணா­னதா என்று பார்க்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறு­கையில்;

மக்­களின் காணி­களை இவ்­வ­ருடம் டிசம்பர் மாதத்­துக்குள் கைய­ளித்­து­வி­ட­வேண்டும்

என்று கால­நிர்­ணயம் விதித்து வட மாகாண சபையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முதலில் வட மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ரணை அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­டதா? அல்­லது அதனை மீறு­கின்­றதா? என்­ப­தனை ஆராய்ந்­து­பார்க்­க­வேண்டும்.

வட மாகாண சபை­யா­னது இதற்கு முன்னர் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக அர­சி­ய­ல­மைப்பை மீறி பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. அந்­த­வ­கையில் இம்­முறை நிறை­வேற்­றி­யுள்ள பிரே­ர­ணை­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கும் முர­ணா­னதா என்று பார்க்­க­வேண்டும். இவை அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டு இருக்­காது என்றே நான் கரு­து­கின்றேன்.

இதே­வேளை வருட இறு­திக்குள் காணி­களை மீள கைய­ளிக்­க­வேண்டும் என்­பது தொடர்பில் கால­நிர்­ணயம் விதித்து பிரே­ரணை நிறை­வேற்­றி­யுள்­ளனர். ஆனால் இந்த இடத்தில் ஒரு விட­யத்தைக் திட்டவட்டமாக கூறுகின்றோம். அதாவது தனியார் காணிகளோ அரச காணிகளோ தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அக்கறை என்று வரும்போது அங்கு விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதனை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :