அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா

ட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழுள்ள பிரதேச சபைகளில் அட்டாளைச்சேனையும் ஒன்று அச்சபையின் உறுப்பினர்களாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 07 உறுப்பினர்களும், ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக -02 உறுப்பினர்களும் உள்ளனர்.

பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து உதவித் தவிசாளராக இருந்த எம்.ஏ.அன்சில் தவிசாளராகவும் அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ்.எம்.உவைஸ் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டனர். மீண்டும் ஒரு உறுப்பினர் ஒலுவிலைச்சேர்ந்த ஏ.எல்.சுபைதீன் இன்று இராஜினா கடிதத்தினை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சித்தீகிடம் கையளித்துள்ளார். அவருக்குப்பதிலாக இருப்பவர் ஐ.எல்.நஸீர் உறுப்பினராக வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :