ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினர் தீர்மானிக்க முடியுமா?

ஜனா­தி­பதி தேர்தல் ஜன­வ­ரியில் நடத்­தப்­படும் என்ற உத்­தி­யோ­க­பூர்வ மற்ற அறி­வி த்தல் பரவத் தொடங்­கி­யதன் பின்னால் இல ங்கை அர­சி­யலில் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக் கும் பதற்ற நிலைகள், ஆரு­டங்கள், விமர்­ச­ன ங்கள் கதைப்­புக்கள் மேற்­படி தேர்­தலை களை­கட்ட வைத்­துள்­ள­தா­கவே உணர முடி­கி­றது.

இந்த தேர்தல் பற்றி தேசிய கட்­சிகள் வகு க்கும் வியூகம் சிறு­பான்மைக் கட்­சிகள் கொள் ளும் ஆவேசம் இங்­கு­மில்­லாமல் அங்­கு­மி ல்­லாமல் தவித்துக் கொண்­டி­ருக்கும் நடு­நி லைக் கட்­சிகள் என எல்லா முனை­க­ளாலும் கூர்­மைப்­பட்டுப் போயி­ருக்கும் ஒரு தேர்­த­லாக 7ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் பார்க்­கப்­ப­டு­கி­றது.

தேசி­யக்­கட்­சி­களைப் பொறுத்­த­வரை அவை அடைந்­தி­ருக்கும் பதற்ற நிலைகள் அதே­ போன்று சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் சவால் நிலைகள் இவை தவிர்ந்த உதி­ரிக்­கட்­சி­களின் மதில் மேல் தன்­மை­யெல்லாம் ஒன்று சேர்ந்த திரு­வி­ழா­வாக இலங்கை ஜனா­தி­பதித் தேர்தல் ஆகிக் கொண்­டி­ருக்­கின்­ற­தென்றே சொல்ல வேண்டும்.

முதலில் தேசி­யக்­கட்­சி­களின் ஜனா­தி­பதித் தேர்தல் பற்­றிய போக்­குகள் எவ்­வா­றான வகி­நிலை பெற்­றி­ருக்­கின்­றது என்­பதை நோக்­கு­வோ­மானால் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்ன­ணியைப் பொறுத்த வரை அதற்­குள்ள ஒரே­யொரு சவா­லாக இருந்த விடயம் தற்­போ­தைய ஜனா­தி­பதி மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா? என்ற சட்­ட­ரீ­தி­யான பிரச்­சி­னை­யாகும். இது தவிர, இக்­கட்­சிக்குள் வேறொரு போட்டி தன்­மையும் எழு­வ­தற்கு சந்­தர்ப்பம் உரு­வா­க­வில்­லை­யென்­பது வெளிப்­ப­டை­யான உண்மை.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைப் பொறு த்­த­வரை 18 ஆவது திருத்­தச்­சட்டம் பாரா­ளு­ மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே அவர் போட்­டி­யி­டுவார் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­யாகும், எழக்­கூ­டிய பிரச்­சி­னை­யாக இருந்­தது மூன்றாம் முறை அவர் போட்­டி­யிட முடி­யுமா என்­ப­தா கும். அந்த சந்­தேகங் கூட தற்­பொ­ழுது சட்ட ரீதி­யாக நிரூ­பிக்­கப்­பட்ட ஒரு விட­ய­மாகி விட்­டது. எதிர்­வரும் ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் தட­வை­யா­கவும் போட்­டி­யி­டு­வதில் அர­சி­ய­ல­மைப்பில் எவ்­வி­த­மான சட்ட சிக்­க­லு­மில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 9 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 18 ஆம் திருத்தச் சட்டம் நிறை வேற்­றப்­பட்­டது. அந்த திருத்த சட்­டத்தின் ஊடாக அர­சி­ய­ல­மைப்பின் 31 ஆவது ஷரத்தின் 2 ஆம் பிரிவு நீக்­கப்­பட்­டதன் கார­ண­மாக ஒருவர் எத்­தனை தட­வையும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான நிஹால் ஜய­மான்ன மற்றும் கோமின் தயா­சிறி ஆகிய இரு­வரும் அண்­மையில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். இவ்­வா­றா­ன­தொரு விளக்­கத்தை இலங்­கையின் உச்ச நீதி­மன்­றமும் ஆலோ­ச­னை­யாக வழங்­கி­யி­ருந்­த­தாக பத்­தி­ரிகை செய்­திகள் தெரி­வித்­தி­ருந்­தன. எனவே, தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் மூன்றாம் முறைக்­கான போட்­டி­யிடல் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றா­கவே இருக்­கின்­றது. ஆனால், ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணிக்கு உள்ள முக்­கி­ய­மான சவா­லாக பார்க்­கப்­படும் விடயம் யாதெனில் எதி­ர­ணியில் யார் கள­மி­றக்­கப்­படப் போகி­றார்கள் என்ற விவ­கா­ர­மாகும்.

பிர­தான எதிர்க்­கட்­சி­களைப் பொறுத்­த­வரை அவர்கள் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை கள் சவால்கள், சங்­க­டங்கள் ஒன்­றுக்கு மேற்­ப ட்­ட­ தா­கவே இன்­றைய சூழ்­நி­லையில் காண ப்­ப­டு­கி­றது. இலங்­கையின் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தக்­கூ­டிய தனி­ம­னித ஆளுமை மிக்­க­வரை தேர்ந்­தெ­டுப்­பதில் ஒரு தெளி­வற்ற தளம்பல் நிலை கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­வ­தையே உண­ரக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை நிறுத்­து­வது வெற்­றியின் சாதக நிலையை உரு­வாக்­குமா அல்­லது பிர­தான எதிர்க்­கட்சி அணி­களை ஒன்­றி­ணைத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்த முடி­யுமா இல்லை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்­கவை நிறுத்­து­வது பொருத்­த­மா­குமா? அல்­லது இது தவி ர்ந்த வேறு ஒரு­வரை நிறுத்த முடி­யுமா? என்­ப­ தெல்லாம் இன்று ஆரா­யப்­பட்டு வரும் விட­ய­ மாகும்.

இதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ராக நிறுத்த வேண்­டு­மென கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­க ளும் முன்னாள் சிரேஷ்ட அமைச்­சர்­களும் ஆர்வம் காட்டி வரு­கின்ற போதும் அக்­கட்­சி யின் பிக்கு முன்­னணி ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் தலை­மை த்­துவ சபையின் தலைவர் கரு ஜெய­சூ­ரி­யவை வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்­துள்­ளது.

இதே­வேளை, ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பா­ள­ராக ரணில் விக்­கி­ரமசிங்­கவை போட்­டி­யிட வைக்க வேண்­டா­மென்றும் பொது­வேட்­பா­ளரை களம் இறக்­கு­மாறு முன் னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்க தன்னை சந்­தித்த ரணி­லுக்கு ஆலோசனை வழங்­கி­யுள்ளார். அது மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ரம சிங்கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகிய இரு­வரும் அண்­மையில் ஜனா­தி­பதி தேர்தல் குறித்து லண்­டனில் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர் என்­பதும் தெரிய வரும் விட­ய­மாகும். என­வேதான் இத்­தேர்தல் குறித்து அர­சியல் கட்சித் தலை­வர்கள் பல­முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு வதை நாளாந்தம் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

எது எப்­ப­டி­யி­ருந்­த­போதும் எதிர்த்­த­ரப்­பி­ன ரைப் பொறுத்­த­வரை ஒரு தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. எடுக்­கப்­பட முடி­யாத ஒரு தளம்பல் நிலை­யொன்று காணப்­ப­டு­கின்­றது என்­பதே எதிர்க்­கட்­சி­களின் இன் றைய நிலை­யாக காணப்­ப­டு­கி­றது. பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வது குறித்து இது­வரை உடன்­பாடு காணப்­ப­ட­வில்­லை­யா­யினும் ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் ரணி­லுடன் பேச்­சு­வார் த்தை நடத்த எதிர்­பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொது வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­ குங்கள் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா கூறிய ஆலோ­சனை கருவை வேட்­பா ­ள­ராக நிய­மிக்­கு­மாறு பிக்கு முன்­னணி விடுத்­தி­ருக்கும் கோரிக்கை பொது வேட்­பாளர் குறித்து ஜே.வி.பி., த.தே. கூட்­ட ­மைப்பு ரணி­லுடன் பேச­வுள்ள அடிப்­படை பிரச்­சி­னை­களை நாம் ஒப்­பிட்டுப் பார்ப்­போ­மானால் ஒரு­ம­றை­மு­க­மான உண்மை புலப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அது­யா­தெனில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் முன்னணியின் சார்பில் மூன்றாம் முறையும் களம் இறங்கி இருக்­கின்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கு நேர் ஒத்த ஒரு போட்­டி­யா­ள­ராக ரணில் ஈடு­கொ­டுக்க முடி­யா­த­வ­ராக கரு­தப்­ப­டு­கிறார் என்ற எண்­ணப்­பாடே மறை­மு­க­மான உண்­மை­யாக தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ரமசிங்­கவின் சிரேஷ்ட தன்மை கட்­சியை நெறிப்­ப­டுத்த உத­வி­னாலும் இன்­றைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆளுமை, செல்­வாக்கு, சுதா­க­ரிப்பு எல்­லா­வற்­றையும் தோற்­க­டித்து வெற்றி கொள்­ளக்­கூ­டிய ஒரு­வ­ராக அவர் கட்­சியின் உள்­ளேயும் சரி வெளி­யேயும் சரி பார்க்­கப்­ப­ட­வில்­லை­யென்­பதே உண்­மை­யாக இருக்­கி­றது.

எதிர்க்­கட்­சி­களை பொறுத்­த­வரை அவர்­களின் இன்­றைய தேவை­யாக இருக்­கின்ற ஒரே­யொரு பிர­தான இலக்கு ஆளும் அர­சா ங்­கத்தை தோற்­க­டித்து வீட்­டுக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மென்­ப­தாகும். இதை செய்­யக்­கூ­டிய வல்­ல­மையும் ஆளு­மையும் உள்­ள­ வர்கள் யார் என்­பதே இன்று எதிர்க்­கட்­சி­க­ளு க்கு எழுந்­துள்ள சவா­லா­க­வுள்­ளது. தனக்கு மூக்­குப்­போ­னாலும் பர­வா­யில்லை எதி­ரிக்கு சகு­னப்­பி­ழை­யாக இருக்­கட்டும் என்­பதே இல ங்­கையின் எதிர்க்­கட்­சி­களின் போராட்­ட­மாக இருக்­கி­றது. பௌத்த தேசிய வாதம் சிங்­கள தேசிய வாதம் ஆகி­ய­வற்றை அர­சியல் சந்­தையில் விற்க முனையும் ஆளும் கட்­சியை தோற்­க­டிக்கும் உபா­யத்தை தேடி எதிர்த்­த­ரப்­பினர் ஓடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற உண்­மை­யையே இந்தப் பொது வேட்­பாளர் விவ­காரம் விளக்கி நிற்­கி­றது. இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை தனது உறு­திப்­பாட்டில் தள­ராத கம்­பீர நிலை கொண்­ட­தா­கவே அது காணப்­ப­டு­கி­றது.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ நிச்­சயம் வெற்­றி­யீட்­டு வார். வடக்கு, கிழக்கு, தெற்கு, மலை­யகம் என அனைத்து பகு­தி­யி­லி­ருந்தும் அவ­ருக்கு அமோக ஆத­ரவு கிடைக்கும். இலங்­கையின் 7 ஆவது ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே என அசைக்க முடி­யாத நம்­பிக்கை கொண்­ட ­வர்­க­ளாக அர­சாங்க தரப்­பினர் இருந்து வரு ­கி­றார்கள். அது­மட்­டு­மன்றி பங்­கா­ளிக்­கட்சி­ க­ளாக இருந்து கொண்­டி­ருக்­கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஹெல உறு­மய தொட ர்ந்து ஆத­ரவு நல்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­ கின்­றது. இதனை முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி நாசூக்­காக, பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது தடவை போட்­டி­யி­டு ­வதில் நாட்­டிற்கோ அல்­லது எதிர்க்­கட்­சி­க­ளு க்கோ தாக்கம் எதுவும் ஏற்­ப­டப்­போ­வ­தில்­லை­யென கூறி­யி­ருப்­ப­துடன் ஹெல உறு­ம­யவும் அர­சாங்­கத்தைப் பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது எனக்­கூறிக் கொண்­டி­ருக்­கின் ­றது.

ஆளும் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை பின்­வரும் பின்­ன­ணிகள் அதற்கு பலம் ஈட்­டு ­மென அதி­க­மாக நம்­பு­கின்­றார்கள். ஒன்று யுத்த வெற்றி, இன்­னொன்று பௌத்த சிங்­கள தேசிய வாதம். மற்­றொன்று சர்­வ­தேச விசா­ர­ணையின் நெருக்­கடி நிலை. இதில் இரண்­டா­வது விட­ய­மான பௌத்த சிங்­கள தேசி­ய­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக தீட்­டி­வி­டப்­ப­டு­வதை அண்­மைக்­கா­லத்தில் நடை­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் நிரூ­பிப்­ப­தா­க­வுள்­ளன. பொது­ப­ல­சேனா போன்ற அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்டு வரு­வதும் அறி­யப்­பட்ட விட­ய­மாகும். இத­னு டன் மற்­றொன்­றாகக் கரு­தப்­படும் சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற பொறியை தனக்கு சாத­க­மாக்கி இலங்­கை­ய­ர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­த ­லிலும் பொதுத்­தேர்­த­லிலும் வெற்­றியைத் தேடிக்­கொள்ளும் சாத்­திய நிலை­யொன்று காணப்­ப­டு­கின்­றது என்ற கருத்து பொது­வா­கவே எல்லா மட்­டங்­க­ளிலும் பேசப்­பட்டு வரும் பொதுக்­க­ருத்­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்கும் நிலையில், ஜனா­தி­பதி தேர்தல் சம்­பந்­த­மாக சிறு­பான்மைச் சமூ­கத்தைப் பிர­தி­ப­லிக்­கின்ற தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், அ.இ.மு. காங்­கிரஸ் என்­பவை மற்றும் மலை­யக கட்­சிகள் உதி­ரிக்­கட்­சி­களின் நிலைப்­பாடு சார்ந்த விட­யங்கள் ஜனா­தி­பதி தேர்­தலைப் பொறுத்­த­வரை இம்­முறை புதிய அணு­கு­மு­றையை மேற்­கொள்ள வேண்­டிய தேவையில் உள்­ளன என்­பதே யதார்த்தம்.

அண்­மையில் ஜனா­தி­பதி தேர்தல் பற்றி கருத்­தொன்றை வெளி­யிட்­டி­ருந்த மாது­லு­வாவே சோபித தேரர் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ ருந்தார். நடை­பெ­ற­வி­ருக்­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ், முஸ்லிம் வாக்­கு­களே யார் ஜனா­தி­பதி என்­பதை தீர்­மா­னிக்கும். அனைத்து கட்­சி­களும் இன்­றைய ஜனா­தி­ப­திக்­கெ­தி­ராக ஒன்றிணைய வேண்­டு­மென்ற கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இதில் கூறப்­பட்ட சோபித தேரரின் கருத்து உண்­மை­யாக இருக்­கலாம். அல்­லது உண் ­மைக்கு மாற்று வடிவம் கொடுக்­கலாம். இன் றைய சூழ்­நி­லையில் சிறு­பான்மை சமூகத்தை பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் அல்­லது முடி­வுகள் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­ம் என்பது பொது­வா­கவே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். ஆட்சி மாற்­ற­மொன்­றைக்­கொண்டு வரு­வதன் மூலமே சிறு­பான்மை சமூ­கத்தின் இருப்­புக்­களை தக்­க­வைக்க முடி­யு­மென்ற இறுதி நம­்பிக்­கைக்கு சிறு­பான்மை கட்­சிகள் வந்­தி­ருக்கும் நிலையில் தமிழ் மக்­களின் போக்கை நிர்­ண­யிக்கும் தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் முஸ்லிம் மக்­களின் அபி­லா­ஷை­களைத் தாங்கி நிற்கும் முஸ்லிம் காங்­கி­ரஸும் எடுக்­கப்­போ­கின்ற முடிவு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கவே இருக்க போகின்­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையை ஆத­ரிப்­பதா இல்லை பொது­வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வதில் உடன்­பாடு காண்­பதா? அது­வு­மன்றி எப்­போக்­கு க்கும் இழு­ப­டாமல் நடு­நிலை வகிப்­பதா என்ற சம­மற்ற நிலையில் இருந்து கொண்­டி ­ருப்­ப­தாக தெரிய வரு­கின்­றது. 2010ம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஜனா­தி­பதி தேர்­தலின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எடுத்த முடி­வுகள் பிற்­கா­லத்தில் கடு­மை­யாக விமர்­சி க்­கப்­பட்ட போக்கு காணப்­பட்­டது என்­பதும் உண்­மையே.

இவ்­வா­றான அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை யில் பார்க்­கின்­ற­போது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தித்­தேர்தல் சார்­பாக எதிர்­கா­லத்தில் எடுக்­கப்­போ­கின்ற தீர்­மா­னங்கள் வரலாற்றுப் போக்கை மாற்­றக்­கூ­டிய தீர்­மா­ன­மாக இருக்க வேண்­டு­மென்­பதே எல்­லோ­ராலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இந்த தீர்­மா­னத்தில் சறுக்கல் நிலை­யொன்று காணப்­ப­டு­மானால் இன் னும் மக்கள் அவ­ல ங்­க­ளையும் அட்­டூ­ழி­ய ங்­க­ளையும் தாங்­கிக் ­கொள்ள முடி­யாத அவ­ல­நி­லை­யொன்றே உரு­வாகும் என்­பது தெளி­வாகத் தெரியும் உண்மை.

இதே­வேளை, இன்­னு­மொரு பக்கம் ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாடு சார்ந்த விட­யமும் எல்­லோ­ராலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற ஒன்றாகும். 18 ஆம் சட் டச் சீர்த்­தி­ருத்­தத்தை அன்று ஆவ­லுடன் ஆத­ரித்த முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்ந்தும் ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு நல்கும் என்ற ஒரு அபிப்­பி­ரா­யமும் அண்­மைக்­கா­லத்தில் கட்­ ட­விழ்த்­து­விட்ட இனத்­துவ முரண் நட­வ ­டிக்­கைகள் முஸ்லிம் சமூ­கத்தை அதி­க ளவு பாதித்­தி­ரு க்கும் நிலையில் புதிய போக்­கொன்றை இலங்கை வாழ் முஸ்­லி ம்கள் கடைப்­பி­டிக்க வேண்டும். அதற்கு ஆயு­த­மாக ஜனா­தி­பதி தேர்­தலைப் பயன்­ப­டுத்த வேண்­டு­மென்று அபிப்­பி­ரா­யப்­ப டும் புத்­தி­ஜீவி சமூ­க­மொன்று முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருந்து கொண்­டி­ருக்கும் நிலையில் அக்­கட்சி எப்­ப­டிப்­பட்ட தீர்­மா னத்தை எடுக்­கப்­போ­கின்­றது என்பது பற்றி ஒன்றுக்கொன்று பலவாறான அபிப்பி ரா யங்கள் கூறப்படுகின்றன.

மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்ற செய்தியும் மூன்றாவது முறையாக வரப்படும் நிலையில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எழக்கூடிய கெடுதி நிலைகள் பற்றி மூத்த தலைவர்கள் கூறிவரும் கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்ற போதும் மிக நிதானமாகவும் கவனமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் ஆராய்ந்து வருகின்றது என்பது தெரியப்ப டுகின்ற ஒரு விடயமாகும். எது எப்படியி ருந்தபோதிலும் எதிர்வரும் ஜனhதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகளாக சிறு பான்மைக்கட்சிகள் இருக்க முடியுமா என்பது இப்போதைய சூழ்நிலையில் கனத்த கேள் வி யாகவே இருக்கின்றது. யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் முஸ்லிம் காங் கிரஸ் முடிவு எடுக்கவில்லை. முதலில் பாராளுமன்ற தேர்தலே வேண்டு மென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம் கூறிக் கொண்டிரு க்கின்றார். இதேநேரம் இனப் பிர ச்சினைக்கு உருப்படியான தீர்வை முன் வைக்கும் வேட் பாளரையே ஆதரிப்போம் என தமிழ் தேசிய க்கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார்.

இவையெல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு இடதுசாரி அமைச்சர்கள் புதிய யோசனை யொன்றை முன்வைத்துள்ளார்கள். இவை யெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க் கின்ற போது 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் என்பது இலங்கை அரசியல் களத்தில் சிறுபான்மை சமூகத்தின் பலத்தை தீர்மானிக்கும் தேர் தலாக அமையப்போகிறதா அல்லது பௌத்த சிங்கள தேசிய வாதத்தின் பல த்தை நிரூபிக்கும் தேர்தலாக அமையப் போகின்றதா என்பது பற்றி தீர்மானிக்க முடி யாத நிலையே உரு வாகியிருக்கின்றது.

நன்றி- வீரகேசரி  நவம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :