ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தலைவர் அஷ்ரப் போன்று தீர்மானத்தை எடுக்க வேண்டும்- அமைச்சர் ஹக்கீம்

1988ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மறைந்த தலைவர் அஷ்ரப் எவ்வாறு மறைமுகமாக ஆதரவை பிரேமதாஸவிற்கு வழங்கினாரோ அதே போன்றே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தீர்மானிக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எ.மன்சூர் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உறையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு பாதுகாப்பு கவசம் முஸ்லிம்களின் தனித்துவமான அரசியலாகும் இதை எம்மவர்கள் மறக்க கூடாது.

நமது கட்சி அரசுக்குள் எதிர்கட்சியாக செயல்படுகின்றது. இது ஜனாதிபதிக்கு தலையிடியாக இருந்தால் அதில் எந்த தவறும் இல்லை என்னுடைய இயக்கத்தின் தார்மீக பொறுப்பு அதுவாகும்.

மறைந்த தலைவர் பிரேமதாஸ ஜனாதிபதியாக்கிய பின்னரும் எதிர்கட்சியில் இருந்தார் மறைந்த தலைவர் அஷ்ரப், அனால் நான் ஜனாதிபதியின் எதிரியாக இருக்கின்றேன். இப்படியான சூழ்நிலையிலே நாம் இருக்கின்றோம்.

கட்சி மட்டத்திலும், சிவில் மட்டத்திலும் கலந்துரையாடி தீர்க்கமான முடிவையும் மேற்கொள்வோம்,கட்சியையும் முஸ்லிம் மக்களையும் பாதுகாப்பது கட்சியின் தீர்க்கமான முடிவாகும் அதை எப்படி செய்யவேண்டுமென்பது மசூரா அடிப்படையில் மிக நிதானமாக நேர்மையாக சுயநலமற்று நாம் தீர்மானம் எடுப்போம் அதற்காக எந்த தியாகத்தையும் செய்வோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :