அக்கரைப்பற்று அப்துல் மஜீத் மக்கத்தாரின் கந்தூரி வைபவம்!

 நிஸ்மி-

க்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரியா ஹல்லாஜ் மகாம் ஜும்ஆ பள்ளிவாயல், நூறுல் இர்பான் அரபுக் கலாசாலை, ஸாவிய்யத்துல் ஹல்லாஜ்ஜியா, மத்ரசதுல் ஆயிஷா ஆகியவைகளின் ஸ்தாபகரும், அந்ரோத் தீவில் படையான் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளவருமான அல்குத்ப், அஷ்ஷேய்க், அஸ்-ஸெய்யித் ஷம்சுல் உலமா அல்ஹாபில் ஹல்லாஜுல் மன்ஸுர் (ரஹ்) காதிரி அவர்களின் 10 வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும், ஆழ்வாய் தாய்க் காட்டுக் ரையில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளவருமான அந் அல்குத்ப், அஷ்ஷேய்க்,அஸ்-ஸெய்யித் ஷம்சுல் உலமா அல்ஹாபில் முஹம்மது ஜலாலுத்தீன் (ரஹ்) காதிரி அவர்களின் 47ஆவது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும் இன்று (18.10.2014); சங்கைக்குரிய குதுபுனா ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அஷ்ஷேய்க், அஸ்-ஸெய்யித் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் அன்னாரின் தரீக்கா கேந்திர நிலையமான அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளி வாயலில் நடை பெற்றது.

ஸெய்குனாவின் முரீதாகிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட.ந் நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர மேயர் அதா உல்லா அஹமட் ஸக்கி அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

சங்கைக்குரிய குதுபுனா ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அஷ்ஷேய்க், அஸ்-ஸெய்யித் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) அவர்கள் ஸெய்குனாவின் முரீதாகிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா அவர்களுக்கு முதலில் கந்தூரியை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்த பின்னர் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா அவர்களுடன இணைந்து பொது மக்களுக்கு கந்தூரியை வழங்கினார்.

ஏராளமான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் கந்தூரியில் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :