வரவு – செலவுத் திட்ட விவாத நாட்கள் நீடிப்பு

வரவு–செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்துக்காக எதிர்க்கட்சி களின் வேண்டுகோளை அடுத்து மேலதிகமாக நான்கு நாட்களை ஒதுக்கு வதற்கு அரச தரப்பு கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நவம்பர் 18ஆம் திகதி நடைபெறவிருந்த வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 24ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 24ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார். மறுநாள் 25ஆம் திகதி முதல் நவம்பர் முதலாம் திகதி வரை வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முதலாம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்.

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறும். 24ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :