வடக்கு, கிழக்கில் நில ஆக்­கி­ர­மிப்­புக்­களை நிறுத்­திய பின்­னரே அர­சுடன் பேச­வேண்டும்

டக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரு­கின்ற திட்­ட­மிட்ட நில ஆக்­கி­ர­மிப்­புக்­களை நிறுத்­திய பின்­னரே அர­சாங்­கத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேச்­சுக்­களில் ஈடு­ப­ட­வேண்டும். நில ஆக்­கி­ர­மிப்பை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு அர­சாங்­கத்தை நிர்ப்­பந்­திக்க வேண்டும் என வட­மா­காண சபை உறுப்­பினர் எஸ்.லிங்­க­நாதன் தெரி­வித்தார்.

வடக்கில் இடம்­பெற்று வரு­கின்ற காணி அப­க­ரிப்புத் தொடர்­பாக விசேட அமர்வு வட­மா­காண சபையில் கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

காணி விட­யங்கள் தொடர்பில் மாகாண சபை, மத்­திய அரசு, மகா­வலி சபை போன்­ற­வற்­றிற்கு அதி­காரம் இருந்­தாலும் மாகாண காணி ஆணை­யா­ள­ருக்கும் குறிப்­பிட்ட சட்ட நிய­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தென்­ன­ம­ர­வாடி காணி தொடர்­பாக கிழக்கு மாகாண சபைக்கு கடிதம் எழு­தி­யுள்ளார்.

உங்­க­ளு­டைய மாகாண சபை சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி இதற்குத் தீர்­வு­கா­ணுங்கள் என அவர் கிழக்கு மாகாண சபைக்குக் கூறி­யுள்ளார்.

கிழக்கில் அவ்­வா­றான நடை­முறை பொருத்­த­மா­ன­தாக இருக்­கு­மாயின் வடக்கு மாகா­ணத்­திற்கும் அது பொருத்­த­மா­ன­தாக அமையும்.

நான் பல­முறை அர­சாங்க அதிபர், மாகாண காணி ஆணை­யாளர் ஆகி­யோ­ருக்கு கடி­தங்­களை அனுப்பி இங்­குள்ள காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பாக தெரி­வித்து வரு­கின்றேன். இதன் பிர­தி­களை மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் அனுப்­பி­யுள்ளேன்.

ஆனால் எனது கோரிக்­கை­க­ளுக்கு என்ன நடக்­கின்­றது என்­பது எனக்குத் தெரி­யா­ம­லுள்­ளது.

சில வேளை­களில் நான் ஆயு­தக்­கட்­சியைச் சேர்ந்­தவன், தம­ழ­ரசுக் கட்­சியைச் சேரா­தவன் என்­பதால் எனது கோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்­லையோ எனவும் நான் எண்­ணி­ய­துண்டு. ஆனால் நான் வட­மா­காண சபைக்கு வந்து கன்­னி­யுரை ஆற்­றி­ய­தி­லி­ருந்து இன்­று­வரை அர­சியல் பேச­வில்லை. மாகாண சபைக்­குட்­பட்ட வகையில் மக்கள் நலன்­சார்ந்த விட­யங்­களை மட்­டுமே கூறி­வ­ரு­கின்றேன்.

அண்­மைக்­கா­ல­மாக அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்து இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்­கு­மாறு கோரி­வ­ரு­கின்­றது. இந்த விட­யத்தில் நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­க­ளுக்கு ஒரு விட­யத்தைக் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன். இவ்­வா­றான பேச்­சுக்­க­ளுக்கு அழைப்­ப­தாக இருந்தால் அதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரு­கின்ற நில ஆக்­கி­ர­மிப்­புக்­களை நிறுத்தவேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தினால் மட்டுமே அரசாங்கத்துடன் பேசுவோம் எனவும் தெரிவிக்கவேண்டும். அதுவே எமது மக்களு டைய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கான சரியான வழிமுறையாக அமையும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :