மூதூர் ஹாதியா-
இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற மூதுாா் கல்விக் கருத்தரங்கு மையத்தினால் நௌபால்டீன் நற்பணி மன்ற அனுசரனணயுடன் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதி மாணவா்களுக்கான பாராட்டு விழாவும் நற்சான்றிதல் வழங்கும் வைபவமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வு ஹிக்மா பட்டப்படிப்பு மையம் மற்றும் மூதுாா் கல்விக் கருத்தரங்கு மையம் ஆகியவற்றின் ஸ்தாபகரும் ஆசிரியருமான சாமஸ்ரீ தேசகீர்த்தி, சாமஸ்ரீ தேசமான்ய, கலாசூரி, வித்யாஸ்ரீ, பத்மஜோதி, கலாநிதி எஸ்.எச்.எம்.அனீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மூதூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து 5ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை எழுதி சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் அழைக்கப்பட்டு அம்மாணவர்களுக்கு பாராட்டும் நற்சான்றிதலும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
மூதூர் பிரதேச வரலாற்றில் இப்படி ஒருவிழாவினைக்கண்டிராத நிலமை இன்றைய விழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்போட்மிரர் இணையத்தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் 700 க்கு மேல் பட்டதாரிகளை உருவாக்கிய ஆசிரியர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்த செய்திக்கு சொந்தக்காறர்தான் இப்படியொரு பிரமாண்டமான விழாவினை நடாத்தியிருக்கிறார்.
கல்வியில் பிந்தங்கிய மாணவர்களைப் பொறுப்பேற்று அவர்களுக்கான கல்வியை நான் வழங்குகிறேன் என்று உறுதிகூறி கற்றுக்கொடுத்து வெற்றிகண்ட ஒரு ஆசான் மூதூர் கலாநிதி அனீஸ் அன்னாரின் வாழ்வில் சந்தோஷம் நிறைந்து நோயற்றவாழ்வுடன் சிறப்பாய் வாழ நாமும் பிரார்த்திப்போம்.
<பட உதவி : மூதூர் போட்டோ நியுஸ்>
<பட உதவி : மூதூர் போட்டோ நியுஸ்>






















0 comments :
Post a Comment