சிரேஷ்ட ஊடகவியலாளரின் புதல்வியின் சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்

மினுவாங்கொடை – கல்லொழுவை , ஜும்ஆ மஸ்ஜித் மாவத்தை, இலக்கம் 196/1 , எனும் முகவரியில் வசிக்கும், அப்துல் காதர் சித்தி றிஸ்மினா வயது- 27 ( 877001962 V ) என்பவர், சிறுநீரக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு, கொழும்பு மேற்குப் பிராந்திய சிறு நீரகம் தொடர்பான வைத்திய சாலையின் விசேட வைத்திய நிபுணரும், பணிப்பாளருமான பேராசிரியர் றிஸ்வி ஷெரீப், மிக அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இவரது சத்திர சிகிச்சைக்காக , சுமார் இருபது இலட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இவரது ஏனைய இதர செலவுகளுக்காக மேலும் பல இலட்சம் ரூபா அளவில் தேவைப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றாடம் சிறு தொழில் செய்து, தன் குடும்பத்தைப் பராமரித்து வரும் இவரது கணவருக்கு, மேற்படி தொகையைத் திரட்டிக் கொள்வது முடியாதுள்ளதால், உயிருக்காகப் போராடிவரும் இவரது உயிரைக் காப்பாற்ற, பரோபகாரிகளிடமிருந்து குடும்பத்தார் நன்கொடைகளை எதிர்பார்க்கின்றனர்.

கருணை உள்ளம் கொண்டோர், ஐ.ஏ.காதர் – இலங்கை வங்கி-லேக்ஹவுஸ் கிளை -3275831, கொமர்ஷல் வங்கி -நகர காரியாலயம்- 8020042523 , மக்கள் வங்கி – தலைமைக் காரியாலயம்- 204200140094973, அமானா வங்கி – புறக்கோட்டை கிளை – 0100204720001 ஆகிய வங்கிகளின் கணக்கிலக்கங்களுக்கு, தமது நன்கொடைகளை வைப்பில் இடுமாறு குடும்பத்தார் வேண்டுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு,

ஐ.ஏ.காதர்- 071- 22 99 801, 072- 22 99 801

ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: சித்தி றிஸ்மினா என்பவர் – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. ஏ. காதிர் கான் (மௌலவி) அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :