இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்களில் 10 கைவிரல் அடையாளங்களும் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு சட்டம் திருத்தப்படவுள்ளது.
இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரவையின் தீர்மானம், அமைச்சரவை உபகுழுவின் சட்ட ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டுக்களுக்கு 10 கைவிரல் அடையாளங்களை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment