இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர். புல்மோட்டை பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்து கொள்ள இருந்தார்.
ஆனால் இந்த நிகழ்வினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் வைத்தியசாலைக்குள் நுளைந்து வைத்திய அத்தியேட்சகரை அச்சுறுத்தி இந்நிகழ்வினை நிறுத்தவேண்டும் என்று கூறியதனால் இந்த நிகழ்வு தடை செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் புல்மோட்டை பொலிசில் தான் அச்சத்துடன் இருப்பதாகவும்தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் முறைப்பாடு செய்துள்ளதாகவும்இம்போட்மிரருக்கு தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சில இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன, அமைச்சர் மன்சூர் இந்நிகழ்வினைக்குழப்பினார் என்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் வைத்திய அத்தியேட்சகரின் செவ்வியில் இம்போட்மிரருக்கு தெரிவித்தார்.

0 comments :
Post a Comment