முழு தீவுக்குமான ஓரு சமாதான நீதவானாக ஹனிபா அப்துல் மனாப் சத்தியப் பிரமாணம்

பைஷல் இஸ்மாயில்-

பாலமுனை ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா அப்துல் மனாப் முழு தீவுக்குமான ஓரு சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நலன்புரி அமைப்பின் தலைவரும், அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம், தேசிய ஜக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் போன்றவற்றின் உதவிச் செயலாளராகவும், பாலமுனை பிரதேச சமூக சேவைகள் அமைப்பின் அங்கத்தவராகவும் செயற்பட்டுவருகின்றார்.

பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மாணவ தலைவராகவும் செயற்பட்ட இவர் மர்ஹூம் ஆதம்லெப்பை முஹம்மது ஹனிபா, உதுமாலெப்பை சித்தி பழீலா ஆகியோரின் முதலாவது புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :