பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெய்க்கா கிராம மக்களினது போக்கு வரத்து
நன்மை கருதி ஜெய்க்கா கிராமத்திற்கு செல்லும் வீதியும், விவசாயிகளின் நலன் கருதி றொட்ட– மென்தோட விவிசாய வீதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் முயற்சியினால் இவ் வீதி அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்றது.
இந்த வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்கள் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், பொத்துவில் பிரதேச செயலாளர்
என்.எம்.எம்.முஸாரத் மற்றும் மத்திய , மாகாண நீர்ப்பாசணம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினது மாகாணப்பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், பிரதேச பொறியியலாளர்கள், முக்கியஸ்தர்களும் விவசாய குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)

.jpg)
0 comments :
Post a Comment