இலங்கை முஸ்லிம்கள் அராபிய கலாசாரத்தை பின்பற்றி உடை அணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது என்று தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த கட்சியின் பேச்சாளர், முகமட் முஸம்மில், இஸ்லாம் இலங்கைக்கு அராபியாவிலிருந்து வரவில்லை; இந்தியாவிலிருந்தே வந்தது.
வரலாற்று ரீதியாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அபயா அணியவில்லை. உள்நோக்கத்துடன் சில முஸ்லிம் குழுக்கள் அராபிய ஆடைகளை பரப்புகின்றன.
ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்ய நினைக்கும் மேற்குலகின் ஆதரவுடைய அந்த முஸ்லிம் அமைப்புக்களின் எண்ணங்களுக்கு பலியாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment