பம்பலபிட்டி தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிக்கும் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவின் வீட்டுத் தோட்டத்தில் கிரனேட் கைக் குண்டொன்று காணப்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தோட்டத்தில் பணி புரிந்தவரே அதைக் கண்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளதோடு யாரோ வெளியிலிருந்து எறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாஸ் குணவர்தன வெளியில் இருந்தால் புலனாய்வுத்துறையினர் உட்பட பலருக்கு ஆபத்து எனக்கருதியே அவரை நீதிமன்றம் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment