அமைச்சர் ஹக்கீம் தலைமையில் ஊவா மாகாண தேர்தல் பிரசாரம் - படங்கள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று 17 ஆம் திகதி ஊவா மாகாண தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஹல்துமுள்ள,ஹாலியல-தீன்புர, வெளிமடை ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

அவருடன் கிழக்கு மாகாண சபை மு.கா.உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் பதுளை மாவட்டத்தில் துஆ கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்‌டி இடும் வேட்பாளர்கள் ஆகியோரும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவது குறிப்பாக அரசாங்கத்துக்கும்,பொதுவாக இதர கட்சிகளுக்கும் அச்சத்தை உண்டாக்கி இருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார். நாளை 18 ஆம் திகதி திங்கள் கிழமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதுளை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :