இவருடைய மகனான ஜேசீ சான் போதை மருந்து வழக்கில் பெய்ஜிங்கில் கைது செய்யப்பட்டார்.சீனாவின் வெய்போ இணைய வலைப்பக்கத்தில் ஜாக்கி மகனுடைய செயலுக்கு "முழுப்பொறுப்பு" ஏற்று பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
"ஒரு பிரபலமாக நான் வெட்கப்படுகின்றேன். 31 வயதான என் மகனை சரியாக வளர்க்கத் தவறிவிட்டேன்" என்று வேதனையுறும் ஜாக்கி 2009 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கின் போதை ஒழிப்பு தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது."ஒரு தந்தையாக நான் வலியை அனுபவிக்கின்றேன்.
அவருடைய தாய் இதயமே வெடித்துவிடும் நிலையில் உள்ளார். இது இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.அவருடைய வெய்போ வலைப்பக்கத்தை 22 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர் என்பது முக்கியமானது.
ஜேசீ மற்றும் தைவான் நடிகரான கைகோ ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி அன்று தடைசெய்யப்பட்ட மாரிஜுனா என்னும் போதைப் பொருளை புகைத்தபோது பிடிபட்டனர்.
"நான் ஒரு தந்தையாக தோற்றுவிட்டேன். எனது மகனுடன் இணைந்து சமூகத்திடம் நானும் மன்னிப்பு கேட்கின்றேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தந்தையாக தோற்றுப்போயிருந்தாலும் இம்மன்னிப்பின் மூலமாக ஒரு நடிகனாகவும், சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஜாக்கி ஜெயித்துவிட்டார் என்றால் அது மிகையாகாது.<த.இ>
0 comments :
Post a Comment