அமைச்சர் உதுமாலெப்பையின் இப்தார் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை அட்டாளைச்சேனையில்

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான, கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் பேச்சாளர் தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் ஆற்றங்கரை உடற்பயிற்சி நடைப்பாதைக்கான இன்டலொக்கிங் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தலுடன் நடைபெறும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு 26.07.2014 ந் திகதி சனிக்கிழமை அட்டாளைச்சேனை பாலத்தடி முன்றலில் நடை பெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசாங்க, மாகாண அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளுர் அரசியல், சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :