எஸ்.எம்.சன்சீர்-
துருக்கி சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ருமிஷா ஜெல்கி (வயது 17) இவர் 7.09 அடி உயரம் உள்ளார். இவர் ஒரு (Weaver Syndrome ) நோயின் காரணமாக அதிக உயரம் வளர்ந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் தற்போது உலகில் வாழும் இளம் பெண்களில் இவர்தான் அதிக உயரம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ருமிஷா ஜெல்கி, என்ற பெண்ணின் கைகள் மட்டும் 24.5 செமீ நீளம் உள்ளது. மேலும் அவரது கால்கள் 30.5 செமீ நீளம் உள்ளது. அவரது ஷூ சைஸ் 12 என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஷூ அமெரிக்காவில் இருந்து தனியாக வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் அதிகாரிகள் ருமிஷாவுக்கு உலகின் மிக உயரமான இளம் பெண் என்ற சான்றிதழை அவருடைய இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினர். 11-வது படித்து வரும் ருமுஷா தனக்கு இந்த கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைவதாக கூறினார்.
0 comments :
Post a Comment