உலகிலேயே மிகவும் உயரமான துருக்கி இளம் பெண்

எஸ்.எம்.சன்சீர்-

துருக்கி சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ருமிஷா ஜெல்கி (வயது 17) இவர் 7.09 அடி உயரம் உள்ளார். இவர் ஒரு (Weaver Syndrome ) நோயின் காரணமாக அதிக உயரம் வளர்ந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் தற்போது உலகில் வாழும் இளம் பெண்களில் இவர்தான் அதிக உயரம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ருமிஷா ஜெல்கி, என்ற பெண்ணின் கைகள் மட்டும் 24.5 செமீ நீளம் உள்ளது. மேலும் அவரது கால்கள் 30.5 செமீ நீளம் உள்ளது. அவரது ஷூ சைஸ் 12 என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஷூ அமெரிக்காவில் இருந்து தனியாக வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் அதிகாரிகள் ருமிஷாவுக்கு உலகின் மிக உயரமான இளம் பெண் என்ற சான்றிதழை அவருடைய இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினர். 11-வது படித்து வரும் ருமுஷா தனக்கு இந்த கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைவதாக கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :