பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு- காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 11-07-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.900க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மாபெரும் இப்தார் நிகழ்வில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான்,ஏ.ஜி.எம்.ஹாருன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சபீல் நளீமி, பிர்தௌஸ் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர்கள் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் வடக்கு மாகாண சபை பிரதிநிதி அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.இங்கு 900க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு தங்களது நோன்புகளை திறந்தனர்.
குறிப்பு காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் நோன்பு திறக்கும் இப்தார் விஷேட நிகழ்வினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment