கரையோர வலய மீளமைப்புத் திட்டத்தில் கரையோரங்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் செயற்றிட்டமானது பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய நிலையான கரையோர வலய மீளாய்வுக் கூட்டம் வாகரை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எ.கோகுலதீபன், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களான ஜீ.விஜயதர்சன், கே.ரூபன், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கரையோர வலய மீளமைப்புத் திட்டத்தின் கீழ் கரையோரங்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்தல், மீளாய்வுக் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படும் பின்வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள், திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கரையோரங்களை பாதுகாக்கும் வகையில் கரையோர மக்களுக்காக சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் மலசலகூடம் அமைத்தல், கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் 56 இலட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக நிரந்தர எல்லையிடல் திட்டம் மற்றும் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வனவள பாதுகாப்பு எல்லையிடல் போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது விசேட முகாமைத்துவ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுகள், ஏனைய அமைப்புக்களுக்கான விழிப்புணர்வுகள், வாழ்வாதார திட்டங்களுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment