பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ரமலான் செய்தி

றிபாஸ்-

ல்லாஹ்வின் பேரருளால் புனித ரமலான் எங்களை வந்தடைந்ததுள்ளது. இந்த ரமலானை நாம் பூரணமாகவும் அவதானமாகவும் பயன்படுத்த வேண்டும். அத்தோடு இந்த நாட்டில் ஓர் இனமுறுகல் ஏற்பட்டு இருக்கின்ற சந்தர்பத்தில் இந்த ரமலான் எங்களை வந்தடைந்து இருக்கிறது. இவ்வாறு இனமுறுகல் இருக்கின்ற சூழலில் பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த காலகட்டத்தில் மிக அவதானமாக செயற்படவேண்டும்.

குறிப்பாக இரவுத்தொளுகையின் போது பள்ளிவாயலுக்கு வெளியிலே கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருப்பது, இரவு நேரங்களில் வீதிகளிலே விளையாடிக்கொண்டிருப்பது, இளைஞர்கள் வீதிகளிலே கூட்டம் கூட்டமாக உலாவருவது, சஹர் நேரங்களில் வீடுகளிலே வானொலிகளை சத்தமாக கேட்பது, இது போன்ற செயற்பாடுகள் ,இவ்வாறான அசாதாரணசூழல் ஏற்படுவதற்க்கு காரணமாக அமைந்து விடும். ஒரு சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட அது மிக பெரிய வன்முறையாக மாறி ஒரு ஊரையே அழித்துவிடும் என்ற அளவு இன்று முஸ்லிம் சமூகத்திற்க்கு எதிரான சதி நடந்து கொண்டிருக்கிறது. 

குறிப்பாக இளைஞர்கள் மிக அவதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவேண்டும். ஆகவே இந்த ரமலானில் இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்க்கு இறைவனிடம் பிராத்திப்போம்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :