தெஹிவளைப் பகுதியில் ஹபாயா, விற்பனை நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரியுள்ளார்.
தெஹிவளை – ஹில்வீதியில் அமைந்துள்ள ஹபாயா விற்பனை நிலையம் மீது நேற்று முன்தினம் அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலில் விற்பனை நிலையத்தின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் சேதமடைந்த விற்பனை நிலையத்தை நேற்று முன்தினம் சென்று பார்வையிட்ட அஸ்வர் எம்.பி. அங்கிருந்து பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனுடனும்
பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுதெஹிவளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், தாக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளார்.
அத்துடன், இப்பகுதியில் ரோந்துப்பணிகளை அதிகரித்து வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும். இத்தகைய தாக்குதல்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அச்சத்தைப் போக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment