பைஷல் இஸ்மாயில்-
புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை உதுமாபுர மஸ்ஜிதுல் முனவ்வரா பள்ளிவாயலுக்கு நீர்பம்பி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு (26) வியாழக்கிழமை இடம்பெற்றது.
பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தவிசாளர் அன்ஸில் முனவ்வரா பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் ரமழான் மாதம் இடம்பெரும் நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடியதை அடுத்து பள்ளிவாயல் தலைவரிடம் நீர்பம்பியையம் வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment