அளுத்கம, வெல்பிடிய பள்ளிவாசல் பாதுகாப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏற்கனவே மூவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மேலுமொரு சகோதரரான அப்கார் (20) என்பவரின் காலின் பகுதியும் இன்று நீக்கப்பட்டுள்ளது.
குறித்த தினம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தால் தற்பாதுகாப்புக்கு தள்ளப்பட்டு இத்தனை இழப்புகளை அடைந்திருக்கும் நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தொடர்ச்சியாக தகவல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறைவன் இந்த இளைஞர்களின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!
0 comments :
Post a Comment