த.நவோஜ்-
அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்கிழமை உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அல் கிம்மா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சவூதி அரேபியாவைச் சேர்;ந்த தனவந்தருமான அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ்ஸபீஈ கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 700 குடும்பங்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment