அளுத்கம வன்முறைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று, தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அதுல் கெசாப், அளுத்கம வன்முறைகள் குறித்து கருத்து வெளியிடுகையில்,
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், தூண்டிவிடும் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்தானவை.
மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழமான அக்கறை கொண்டுள்ளது.
நான் எல்லாச் சந்திப்புகளிலும், மத விவகாரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment